Kalayarkoyil

பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முன் தெரிந்திருக்க வேண்டியவை:


·         பங்குகளின் மதிப்பை அடிப்படையாக கொண்டு வாங்குவது தான் முதலீடு, பங்குகளின் விலையை அடிப்படையாக கொண்டு வாங்குவது சூதாட்டம்.
·         பங்குசந்தையில் நுழையும் முன் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும், இங்கு 60 % லாபமும் 40 % அடைய வாய்ப்புகள் உண்டு.
·         பங்குச்சந்தைக்குள் நுழைந்த உடன் நமக்கு நட்டம் மட்டுமே ஏற்படும்.
·         லாபம் ஈட்டும் முன் நட்டம் வரமால் எப்படி முதலீடுகளை பாதுகாத்தல் என்பதை கற்க வேண்டும்.
·         யாருடடைய தூண்டுதலின் பேரில் பங்குகளை வாங்கவோ விற்கவோ கூடாது.
·         உங்களுடைய நம்பிக்கை இங்கு பலிக்காது மாறாக தெளிவான ஆய்வுகள் மட்டுமே உங்களுக்கு பலன் அளிக்கும்.
·         அத்தியாவசிய தேவைகள் போக உள்ள பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
·         கடன் வாங்கி இங்கு முதலீடு செய்ய கூடாது.
·         பருவநிலை மாறுவதை போல பங்குச்சந்தை நாம் எதிர்பாக்காத பல மாற்றகளை கொண்டிருக்கும்.
·         உணர்ச்சிவச படமால் முடிவுகளை எடுக்க வேண்டும்.
·         பங்குகளை வாங்குவது விற்பது இவை சரியாக ஆராய்ந்த பின்னர் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
·         பங்குகளை வாங்கி/விற்ற பின்னர் இவ்வாறு செய்து விட்டோமே என நினைக்க கூடாது.
·         இது ஒரு வகையான கலை, எளிதில் கற்றுக்கொள்ள முடியாது.
·         உலகமே உங்களை எதிர்த்து நின்றாலும் உங்களுயை ஆய்வுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை விட்டு மாறாமல் நிலையாக இருக்க வேண்டும்.
நான் எப்பொழுதுமே ஒரு முதலீட்டாளராகவே இருக்க ஆசை படுகிறேன், பங்குசந்தையில் தினசரி வணிகம் என்பது கத்தி போன்றது அதை தெரிந்தால் முறையாக பயன்படுத்துங்கள் இல்லையெனில் அது உங்கள் கையை வெட்டி விடும்.


“குறைவான விலைக்கு வாங்கு அதிகமான விலைக்கு விற்றுவிடு" என்பதைத் தவிர பிற சிறந்த பங்குச்சந்தைக் குறிப்புகள்:

 பங்கு சந்தையில் மூன்று விதமான முதலீட்டார்கள் பங்கு கொள்கிறார்கள்.

1. தினசரி வர்த்தகர் (Day trader) - இவருக்கு பங்குகளின் விலை மட்டும் பிரதானம். ஒரே நாளில் வாங்குவது விற்பது என்று விளையாடுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு பிறகு கூட்டி கழித்து பார்த்தால், பெரும்பாலானவர் நஷ்டமே பார்க்கிறார்கள்
2. குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor) - இவருக்கு பங்குகளை வாங்கி, ஓர் இலக்கு அடைந்து விட்டால் அதை விற்று லாபம் பாக்கிறார்கள். அதே போல் நஷ்டம் ஆகி விட்டால் வெளியே வந்து விடுகிறார்கள். நாளடைவில் லாப நஷ்டம் இரண்டும் கிட்ட தட்ட பூஜியம் ஆகவே இருக்கிறது
3. நீண்ட கால முதலீட்டாளர் (Long term investor) - இவருக்கு பங்குகளை ஒரு நிறுவனத்தின் பாகமாக பார்க்கும் தன்மை உள்ளது. ஒரு பங்கு வாங்கும் போது, அந்த நிறுவனத்தின் வணிக உரிமையாளர் (Business owner) போல் யோசிக்கும் முதிர்ச்சி இருக்கும். அதனால் இவர் வாங்கும் பங்குகளை நன்றாக ஆராய்ந்து சரியான விலையில் வாங்குகிறார், மற்றும் பல வருடம் வைத்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு டிவிடெண்ட், போனஸ், ரைட்ஸ் மற்றும் பைபாக் (Buy Back) போன்ற நன்மைகளும், வருமானமும் பங்கு மதிப்பு வளர்ச்சியும் கிடைக்கின்றது. இது தவிர அவருடைய வருங்கால சந்ததிகளுக்கு பெரும் செல்வத்தை அளிக்கும் தகுதியும் வாய்ப்பும் உருவாகிறது.
ஒரு முதலீட்டாளராக, நான் மூன்றாவது வகையான நபர்.